SAINT FRANCIS XAVIER CHURCH

Tuesday 17 March 2015

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே

இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் (2)
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதிலோர் ஆகமம் (2)
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே (2)

இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் (2)
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே (2)
தந்தேன் என்னை தந்தேன் என்றும் என்வாழ்வு உன்னோடுதான் (2)

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About