SAINT FRANCIS XAVIER CHURCH

Sunday 15 March 2015

புதுமை தேடுகின்ற இதயங்களே

புதுமை தேடுகின்ற இதயங்களே
புது பலியினில் கலந்திட வாருங்களே (2)
புவியில் ஆண்டவர் இருக்கின்றார் - அவர்
புனித இதயங்களில் பிறக்கின்றார் (2)
எழுக எழுக இறைகுலமே - இங்கு
இறைவனின் ஆசி அடைந்திடவே (2)

இடர்படும் இறைவனின் ஊழியரே - நம்
இறைவனின் பணியினை ஏற்றிடவே (2)
இகமதில் இனிதே அழைக்கின்றார் (2)
தலைவன் தங்க தலைவன் இயேசுவின் வழியினில்
இந்தத் தரணியை நாளும் வழிநடத்திடவே பணிக்கின்றார்.

ஏழைகள் வாழ்வை உயர்த்திடவே - எங்கும்
எளியோர்க்கு நற்செய்தி உரைத்திடவே (2)
அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவே (2)
உதயம் தேடும் இதயங்களெல்லாம் உண்மை விடுதலை
அடைந்திடும் நிலையை உன் வழியே அவர் காண்கின்றார்.

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About