SAINT FRANCIS XAVIER CHURCH

Tuesday 17 March 2015

தினந்தோறும் தினந்தோறும் உன்னை நானும் தேடி

தினந்தோறும் தினந்தோறும் உன்னை நானும் தேடி
வருவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
இப்போதும் எப்போதும் கவி நூறு பாடி
தொழுவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும்
ஒரு தீண்டல் அது போதுமே - என்றும்
என் வாழ்வே உனதாகுமே

வழியெங்கே எனத்தேடி விழி ஏங்கும் போது
நான் தேடும் வழியாகும் உன் சந்நிதி (2)
வரும்கோடி உனைநாடி மனம் தேடும்போது
நான் காணும் கதியாகும் உன் சந்நிதி
நதி கூடும் கடலாக விழிமூடும் இமையாக
கவி பாடும் குயிலாக கனியூட்டும் சுவையாக
வந்த என் சொந்தமே வாழும் உன் பந்தமே - ஒரு பார்வை

சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது
சுமை தாங்கும் கரமாகும் உன் சந்நிதி (2)
சொந்தங்கள் இனி எங்கே என ஏங்கும்போது
உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி
பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக
மழை தேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக
வந்த என் சொந்தமே வாழும் உன் பந்தமே - ஒரு பார்வை

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About