SAINT FRANCIS XAVIER CHURCH

Sunday 15 March 2015

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே

நல்லகாலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே (2)
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே (2)

இயேசு சாமி வார்த்தைகள பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே (2)
இறைவன் தந்த அருள் கொடையே சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் (2)
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

கட்டுமர ஓடத்திலே கடல்மீது போகையிலே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
அலையோடு போராடி வலை வீசும் வேளையிலே (2)
நல்லாசி தந்திடுமே சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About