SAINT FRANCIS XAVIER CHURCH

Sunday 15 March 2015

உலகமெல்லாம் எனக்காதாயம்

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை (2)
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா (2)
இந்தக் கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் (2)
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான் (2)

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை (2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான் (2)

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About