SAINT FRANCIS XAVIER CHURCH

Monday 25 November 2013

தூய ஆரோக்கிய அன்னையின் அற்புதம்


அன்புக்குரியவர்களே.....

இங்கே பதிவிடப்போகும் நிகழ்ச்சி ஒரு உண்மை சம்பவம். தூய ஆரோக்கிய அன்னையின் கருணைக்கு ஒரு உண்மையான சாட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் என்னும் ஊரைச் சார்ந்த நண்பர் ஒருவர் அழகிய மண்டபம் என்னும் ஊரைச் சார்ந்த ஒரு பெண்ணை நேசித்து திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். இன்னும் ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த பெண் உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டார். மட்டுமல்லாமல் அவர் வாய் பேசும் தன்மையையும் இழந்தார். கடந்த 18 நாட்களாக அவர் வாய் பேச இயலாமல் இருந்தார். பல மருத்துவமனைகளிலும், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மருத்துவ மனையிலும் கைவிடப்பட்ட நிலையில் அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த துன்பத்தை அந்த மாத்தூரைச் சார்ந்த நண்பர் ஆலஞ்சி ஊரைச் சார்ந்த நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார். அவரது வேதனையை புரிந்து கொண்ட நண்பர் ஆலஞ்சி மாதா நகரில் உள்ள குருசடியில் வீற்றிருக்கும் தூய ஆரோக்கிய அன்னையை மனதில் நினைத்து அந்த பெண் உடல் நலம் பெறவும், அவருடைய வாய் பேசும் திறன் திரும்ப வரவும் மனமுருகி வேண்டிக்கொண்டார்.

நேற்று இரவு சுமார் 2.00 மணியளவில் அந்த பெண்ணுக்கு நோய் அதிகமாகி மிகவும் துன்பப்பட்டார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை வேலூரில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தீர்மானித்து காரில் கிளம்பினார்கள். மதுரையை தாண்டி 16 கிலோ மீட்டர் தூரம் சென்றதும், திடீரென்று கார் பழுதாகி நின்றது. ஓட்டுனர் முடிந்தவரை முயன்றும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.

உடனே ஓட்டுனர் அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு பக்கத்தில் ஒர்க் ஷாப் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க சென்றார். இவர்கள் காரிலிருந்து கீழே இறங்கினார்கள். அங்கே தூய ஆரோக்கிய அன்னையின் ஒரு குருசடி இருந்தது. இவர்கள் அந்த பெண்ணையும் அழைத்துச் சென்று அந்த குருசடியில் அமர்ந்து மாதாவை நினைத்து ஜெபித்தார்கள்.

சிறிது நேரத்தில் அந்த பெண் வாயில் ஏதோ ஒரு சிறு குழந்தை தட்டியதைப் போல உணர்ந்தார். உடனே அவர் திடுக்கிட்டு அலறிக்கொண்டு எழுந்தார். என்ன விந்தை பாருங்கள்! அவர் எழுந்தவுடன் அவருக்கு பேச்சு வந்தது. உடலில் உள்ள நோய்கள் எல்லாம் குணமாகி ஒரு புதிய தெம்பு வந்ததை உணர்ந்தார். அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்து கண்ணீரோடு மாதாவுக்கு நன்றி செலுத்தினர்.

பின்னர் அவர்கள் வேலூருக்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து திரும்ப வீட்டிற்கே வந்தனர். இது மாதாவின் கருணை தானே! இது முற்றிலும் உண்மை. தூய ஆரோக்கிய அன்னையின் மீது நம்பிக்கை வைத்தால் அவர் நமக்கு பல நன்மைகளை செய்வார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.

Monday 11 November 2013

சேவியர் கோட்டை (Castle of Xavier)

சேவியர் கோட்டை ஸ்பெயின் நாட்டின் ஃபிரனேயன் மலையடிவாரத்தில் உள்ள நவரா என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்குதான் தூய பிரான்சிஸ் சவேரியார் 1506 -ஆம் ஆண்டு ஏப்ரல் 7 -ஆம் நாள் பிறந்தார்.



Saturday 9 November 2013

தூய சவேரியாரின் வலது கை (Right Arm of St. Francis Xavier)

Right Arm of Saint Francis Xavier
தூய சவேரியார் சீனா செல்லும் வழியில் மரணமடைந்தார். பின்னர் அவரது திருவுடல் மலாக்காவில் ஆறுமாத காலம் புதைக்கப்பட்டிருந்தது. எலும்புகளை எடுப்பதற்காக ஆறுமாதங்கள் கழித்து தோண்டியபோது எந்தவித சிதைவுமில்லாமல் உடல் அப்படியே இருந்தது. இறுதியாக அவரது திருவுடல் கோவாவில் பாம் ஜீசஸ் ஆலயத்தில் நிலைப்படுத்தப்பட்டது.

1614 - ஆம் ஆண்டு இயேசு சபைத் தலைவராகப் பொறுப்பேற்ற க்ளவுடியோ ஆக்குவாவீவா என்பவர் சவேரியாரின் உடலிலிருந்து அவரது வலது கையைத் துண்டித்து அதை உரோமைக்கு அனுப்பித் தருமாறு பணித்தார். அக்கையால்தான் சவேரியார் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கியிருந்தார்.

சவேரியாரின் திருவுடலிலிருந்து அவரது வலது கையை அகற்றும் போது அவர் இறந்து 62 ஆண்டுகள் ஆகியிருந்தது. அப்போது கூட அவரது உடலிலிருந்து இரத்தம் பீறிட்டது. இன்று சவேரியாரின் வலது கை மக்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் உரோமையில் உள்ள இயேசு கோயிலில் உள்ளது.

மலாக்காவில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தின் முன்பு 1952 ஆம் ஆண்டு அப்போதைய ஆயர் சவேரியாரின் திருவுருவச் சிலையை நிறுவ வேண்டுமென்று விரும்பினார். பளிங்கு கல்லால் ஆன சவேரியாரின் திருவுருவச் சிலை இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற சிற்பி G.Toni என்பவரால் உருவாக்கப்பட்டு 1953 -ஆம் ஆண்டு மார்ச் 22 -ஆம் தேதி நிறுவப்பட்டது.

ஒருநாள் இரவு ஒரு பெரிய மரம் இந்த சிலையின் மீது முறிந்து விழுந்து சிலையை புதைத்துவிட்டது. பின்னர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி சிலையை மீட்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. சவேரியாரின் திருவுருவச் சிலையில் அவரது வலது கை உடைந்து விட்டது. ஆனால் சிலையின் மற்ற எந்த பாகமும் சிறு சிதைவு கூட இல்லாமல் அப்படியே இருந்தது.

இது சவேரியாரின் அழியாத உடல் வலது கையற்ற நிலையில் கோவாவில் உள்ளது என்பதை காட்ட சவேரியார் செய்த மற்றொரு அற்புதமாக கருதப்படுகிறது. இந்த வலது கையற்ற சவேரியாரின் திருவுருவச் சிலை இன்றளவும் மலாக்காவில் உள்ள புனித பீட்டர் மலைக்கோயிலில் உள்ளது.

St. Fancis Xavier Statue without Right Arm
St Francis Xavier died off the coast of China and his body was buried in Malacca for six months before going on to its final resting place in Goa, India. In 1614, the Pope requested the right arm of Saint to be severed from his corpse and sent to Rome. Blood was said to have gushed out of the arm even though he had been dead for 62 years. Immediately after Fr Francis Xavier was canonized a Saint in 1622 the remains of the right arm in Rome was merely a skeleton, but the whole body in Goa remains incorruptible minus the right arm. 

In 1952 the Bishop of Macau decided to put up a statue in front of the St Paul's Church. A marble statue was ordered from Italy and was sculptured by the famous Italian sculpture, G. Toni and was ready for the fourth centenary celebrations on the 22 March 1953. One quiet night a huge tree fell burying the statue. On clearing the branches, the statue was found to be intact except for the right arm which had broken off. This is yet another miracle of St. Francis Xavier to show that his incorruptible body in Goa today is without the right hand. Until today visitor to St Paul's hill can still witness this phenomenon with the statue standing without the right hand.

Friday 8 November 2013

ஆலயக் கொடி மரம் (The Holy Flag Pole)


கி.பி.1945 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு முன்புறமுள்ள கொடிமரமானது நிறுவப்பட்டது. இது கடைவிளாகம் (தற்போதைய குறும்பனை ஆலயத்திற்கு அருகில் உள்ள பகுதி) என்னுமிடத்தில் வசித்து வந்த சலவை தொழில் செய்யும் ஒரு தாயாரால் தூய சவேரியாருக்கு நேர்ச்சையாக வழங்கப்பட்டதாகும்.

இக்கொடிமரம் மிகவும் நேர்த்தியாக கல்குறிச்சியில் செய்யப்பட்டு, நான்கு காளை வண்டிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி அதன்மீது ஏற்றப்பட்டு மக்களால் இழுத்துவரப்பட்டது. சரியான சாலை வசதிகள் இல்லாத நிலையில் மேடு பள்ளமான வழித்தடங்களில் மக்களின் எழுச்சிமிகு கூட்டு முயற்சியில் கொண்டு வரப்பட்டது. வழியில் பனவிளை அருகே வரும்போது பனவிளை ஏற்றத்தில் இழுத்து வர முடியாமல் நின்றது. உடனே அங்கிருந்து எமது ஊருக்கு உடனே தகவல் வர, காத்திருந்த மக்களும், குறும்பனை, மிடாலம் பகுதிகளைச் சார்ந்த தூய சவேரியாரின் பக்த்தர்களும் வேகமாகச் சென்று அன்பரின் கொடிமரத்தினை ஆலஞ்சிக்கு கொண்டு வந்தனர்.
 
இவ்வாறு கொண்டுவரப்பட்ட கொடிக்கம்பமானது பட்டை வடிவில் செதுக்கப்பட்டது. செதுக்கும் போது மூன்று அடி அளவில் தனியாக உடைந்தது. உடைந்த பாகத்தைத் தவிர மீதமுள்ள கல் கொடிமரமாக வடிவமைக்கப்பட்டது. உடைந்த பாகமானது ஆட்டுரல் வடிவில் செதுக்கப்பட்டு கொடி மரக்கல்லுக்கு அடித்தளமானது. இந்த கொடிமரம் நிலை நிறுத்தப்பட்டபோது இரண்டு பனைமரங்கள் தாங்கியாக X வடிவில் பயன்படுத்தப்பட்டன. கொடிக்கம்பமானது மேலே தூக்கப்பட்டபோது, அதற்காக பயன்படுத்தப்பட்ட முக்கிய வடம் அறுந்தது. இதனால் பனைமரத்தாங்கிகளில் கொடிமரம் நிலைநிறுத்தப்பட்டது.

மறுநாள் குளச்சல் துறைமுகத்திலிருந்து வடம் மற்றும் பெரிய கப்பிகளைக் கொண்டு வந்து அவற்றை சரியாகப் பயன்படுத்தி மக்களின் முழுமுயற்சியோடு தற்போது இருப்பது போன்று கொடிமரம் நிலை நிறுத்தப்பட்டது. அன்று கொடிமரம் கொண்டு வந்த பாதையானது பிற்காலத்தில் சாலையாக உருவானது குறிப்பிடத்தக்கது.


 

Blogger news

Blogroll

About